சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 70,071 ஆக உள்ளது. சென்னையில் 22,890 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,990 பேர்
அண்ணா நகர் - 2,383 பேர்
தேனாம்பேட்டை-2,447 பேர்
ராயபுரம் மண்டலத்தில் - 1,999 பேர்
தண்டையார்பேட்டை-1,810 பேர்
திரு.வி.க. நகர்- 1,898 பேர்
அம்பத்தூரில் 1,314 பேர்
வளசரவாக்கத்தில் 1228 பேர்
அடையாறு 1,673 பேர்
திருவொற்றியூரில்-1,243 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.