சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Update: 2020-07-09 05:49 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 72,500 ஆக உள்ளது. சென்னையில் தற்போது 21,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,657 பேர்

அண்ணா நகர் - 2,511  பேர் 

தேனாம்பேட்டை-2,118 பேர் 

ராயபுரம் மண்டலத்தில் - 1,741 பேர் 

தண்டையார்பேட்டை-1,628  பேர்

திரு.வி.க. நகர்- 1,778 பேர் 

அம்பத்தூரில் 1,306 பேர்
 
வளசரவாக்கத்தில் 1,049 பேர்

அடையாறு 1,412 பேர் 

திருவொற்றியூரில்-979 பேர்

ஆலந்தூர் - 799 பேர்

பெருங்குடி - 798 பேர்

மாதவரம்-778 பேர் 

சோழிங்கநல்லூர்-463 பேர்

மணலியில் 463 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்