சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை மேலும் 21 பேர் கொரோனாவுக்கு பலி
சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
சென்னையிலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தினமும் கவலை அளிக்கும்படியாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதில் அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.