தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவப் பரிசோதனை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Update: 2020-08-02 05:40 GMT
சென்னை

தமிழக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட  சுமார் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள்  தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச்  சென்றுள்ளார்.

மேலும் செய்திகள்