புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-08-03 13:50 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்வேறு பிரிவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அறிவித்தார். 

பின்னர் புதுச்சேரி மாநிலத்த்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என கமல்ஹாசன் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்