எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை
எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தந்தையின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது; மிக தைரியமாக உள்ளோம்; மக்களின் பிராத்தனை எஸ்பிபி-ஐ மீட்டுக் கொண்டு வரும் என கூறி உள்ளார்.