தமிழகத்தில் இன்று மேலும் 5,980 பேருக்கு கொரோனா தொற்று -சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் மேலும் 5,980- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பாடில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 5,980 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,73,410- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,420- ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 5,603 - டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். . சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.