நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருடன் தூத்துக்குடி எஸ்.பி. ஆலோசனை
போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.;
2025-ம் ஆண்டிற்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்களுக்கான எழுத்து தேர்வு நாளை 21.12.2025 நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி. மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, வ.உ.சி. கல்லூரி, கிரேஸ் இஞ்சினியரிங் கல்லூரி மற்றும் காமராஜ் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் மொத்தம் 5,146 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த எழுத்து தேர்வை முன்னிட்டு காவல்துறையினர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் இன்று ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எஸ்.ஐ. எழுத்து தேர்வுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏ.டி.எஸ்.பி., ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்தூக்குடி காவல்துறை ஏ.டி.எஸ்.பி. ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், மதுவிலக்கு அமலாக்கு பிரிவு டி.எஸ்.பி. குருவெங்கட்ராஜ், தூத்துக்குடி (பயிற்சி) டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் அமைச்சுப்பணி கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.