பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-04 07:54 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மற்றவர்களை மீட்கும் பணியில் பொதுமக்களும் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் வெடி விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் கவலைக்கிடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்