திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னையில் இன்று (புதன்கிழமை) திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 16,621 தெருக்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.