பராமரிப்பு பணி: சென்னை சென்டிரல்-கோவை சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-கோவை சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2020-10-11 00:51 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 14-ந் தேதியில் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* மறுமார்க்கமாக கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (02676) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு பதிலாக மதியம் 3.35 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்