நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-10-17 11:01 GMT
சென்னை, 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மொத்தம் 1.21 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில் 1,615 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்