உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகி விட்டனர் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயாராகி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2020-10-18 06:38 GMT
சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன் இல்ல திருமணத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார் அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி அமைக்க நம்மை தயார்படுத்த வேண்டும். மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. 

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகிவிட்டனர்.  6 மாதத்திற்கு பிறகு காட்சி மாறும்; செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும். திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப்பார்க்கவோ முடியாது.  ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை தி.மு.க.,விற்கு தர தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்