ஆந்திரத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் - ராமதாஸ்

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-22 08:26 GMT
சென்னை, 

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதையும் செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் என்றும், இங்குள்ள ஆட்சியாளர்கள் செய்வது குறித்தும் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்