ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-24 11:29 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் 9 வது முறையாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த 21 மாதங்களாக விசாரணை நடைபெறாமலேயே காலநீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்