தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-20 12:50 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,66,677 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,11,084 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 34-வது நாளாக சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 11 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,568 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,173 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,41,705 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 13,404 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 68,033 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 1,14,01,239 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்