அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது: சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்து உள்ளது.
சென்னை,
நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்து கொள்ளப்பட்டது.
இதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது என வருத்தம் தெரிவித்தனர்.
இதேபோன்று பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.