கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தி.மு.க-வின் மக்கள் கிராம சபை கூட்டத்தால் பலனில்லை என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Update: 2021-01-06 04:49 GMT
பவானி,

முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டமாக இன்று காலை பவானியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  

தி.மு.க-வின் மக்கள் கிராம சபை  கூட்டத்தால் பலனில்லை. வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தி.மு.க-வின் மக்கள் கிராம சபை  கூட்டத்தால் பலனில்லை. 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கை” என்றார். 

மேலும் செய்திகள்