தமிழகத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-02-06 13:28 GMT
சென்னை,

தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 326 ஆக உயர்வடைந்து உள்ளது.

503 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 24 ஆயிரத்து 527 ஆக உயர்வடைந்து உள்ளது.  சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.  3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 382 ஆக உள்ளது.  4,417 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்