விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு

தி.மு.க., எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Update: 2024-04-30 06:46 GMT

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 6- ந்தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8-ந்தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் கடைசி கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி விடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்