ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்புத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Update: 2021-02-17 11:25 GMT
தூத்துக்குடி

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைத்தார். பனங்குடியில் காவிரிப்படுகை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் நேரடியாக கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்