தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 442- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-23 14:29 GMT
சென்னை,

தமிழகத்தில் புதிதாக இன்று  442 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,49,166 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 148 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 6 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,472 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து 453- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை மொத்தம் 8,32,620 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்புடன் தற்போது மருத்துவமனையில் 4,074 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்