தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: புதிதாக 567 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-07 13:38 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,55,121 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,518 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 521 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,38,606 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 3,997 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,36,978 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்