"டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன?" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி

டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2021-03-16 21:49 GMT
கோவில்பட்டி,

தமிழக சட்ட சபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்களம் விறுவிறுப்பாகி வருகிறது. தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கழுகுமலை பகுதியில் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

திமுக தலைவர் ஸ்டாலின் ராக்கெட்டில் வந்தால் கூட மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சட்டமன்றத்திற்கு மூன்று முறை தான் டிடிவி தினகரன் வருகை தந்திருக்கிறார். "ஆர்.கே.நகரில் இருந்து டிடிவி தினகரன் ஓடிவரக் காரணம் என்ன?. என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்