தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,33,434 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-04-11 13:19 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 88,538 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,33,434 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,78,571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,134 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 22 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது 41,955 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்