கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

Update: 2021-04-15 06:01 GMT
Image courtesy : Twitter/@RAKRI1
சென்னை

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். மக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது 

மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் கேவாக்சின், கோவிஷீல்டு  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு  இது வரை எந்த பக்க விளைவுகளும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என கூறினார்.

மேலும் செய்திகள்