நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-16 08:27 GMT
சென்னை,

நடிகர் விவேக் இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது  அவருக்கு திடீர் என மாரடைப்பு  ஏற்பட்டது  உடனடியாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்