விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு

விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு.

Update: 2021-05-13 00:07 GMT
சென்னை, 

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா. சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவியான இவர், கடந்த, 2017-ம் ஆண்டு வேளச்சேரி பிரதான சாலையில் மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கனரக வாகனம், பூர்ணிமாவின் மொபட் மீது மோதியது.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அதைத்தொடர்ந்து ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் பூர்ணிமா வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.ரேவதி, விபத்து காரணமாக மனுதாரருக்கு 95 சதவீதம் இயலாமை ஏற்பட்டுள்ளது. அதற்கு கனரக வாகனத்தை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.

எனவே, மனுதாரருக்கு ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.31 லட்சத்து 70 ஆயிரத்தை வழக்குத் தொடர்ந்த நாளில் இருந்து ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்