உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண்சரிவு; 2 தொழிலாளர்கள் சாவு

உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்ககள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-06-07 18:58 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் கற்களை பெயர்த்து எடுக்கும் பணிக்காக 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று இரவு பொக்லைன் எந்திரம் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது திடீரென அருகில் மண் சரிவு ஏற்பட்டு பொக்லைன் எந்திரம் மற்றும் தொழிலாளர்களான வடமாநிலத்தை சேர்ந்த சுனில்குமார்(வயது 30), சேர்கான் அன்சாரி அதனடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

பிணமாக மீட்பு

இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் மண்சரிவில் சிக்கிய இருவரையும் பிணமாக மீட்டனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்