சென்னை, மதுரை ஐகோர்ட்டுக்கு 44 அரசு வக்கீல்கள் நியமனம் தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை, மதுரை ஐகோர்ட்டுக்கு 44 அரசு வக்கீல்கள் நியமனம் தலைமை செயலாளர் உத்தரவு.

Update: 2021-06-10 20:53 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாட புதிதாக 44 வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டுக்கு வக்கீல்கள் ஜி.கிருஷ்ணராஜா, சி.கதிரவன், சி.செல்வராஜ் உள்பட 29 பேரும், மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு ஆர்.எம்.அன்புநிதி, கே.சஞ்சய்காந்தி, ஆர்.ராகவேந்திரன் உள்பட 15 பேரும் அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

இவர்கள் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராவார்கள் என்றும், இவர்களது நியமனம் தற்காலிகமானது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்