கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை

கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகைகள் வழங்கி மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-23 06:06 GMT
சென்னை,

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகைகள் வழங்கி மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின்வாரியம் அறிவித்திருக்கும் சலுகைகளின்படி, இம்மாதத்திற்கான மின் கட்டணத்தை, 2019 ஆண்டு ஜூன் மாதத்தில் செலுத்தப்பட்ட தொகையினை உத்தேசமாக கணக்கீடு செய்து கட்டலாம் எனத் தெரிவித்துள்ளது. 

அந்த கட்டணம் கூடுதலாக இருப்பதாகக் கருதுபவர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான மின் கணக்கீட்டின்படி உத்தேசமாக மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் மின்வாரியம் கூறியிருக்கிறது.

மேலும் செய்திகள்