பாலிடெக்னிக் கல்லூரியில் பகுதிநேர பட்டய படிப்பு: 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை

சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-25 06:39 GMT
சென்னை,

மாணவர் சேர்க்கைக்காக இணையதளத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,210 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு 52 இடங்களில் வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் செய்திகள்