‘‘கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்குவது அராஜகம்’’ சசிகலா பேச்சு
‘‘கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்குவதை ஏற்க முடியாது. இப்படி அராஜகம் செய்யக்கூடாது.’’ என்று தொண்டர்களிடம் சசிகலா பேசியுள்ளார்.
சென்னை,
சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்தவகையில் திருவாரூரை சேர்ந்த சரவணன், அபுதாகீர், ராணிப்பேட்டையை சேர்ந்த கண்ணதாசன், தேனியை சேர்ந்த கண்ணன், பொள்ளாச்சியை சேர்ந்த முருகவேல், கோவையை சேர்ந்த நாகராஜ் ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் பேசினார்.
அதன் விவரம் வருமாறு:-
நிச்சயம் நல்ல நிலைமைக்கு கட்சியை கொண்டு வருவேன்.
நான் சிறையில் இருந்த காலத்துல தொண்டர்களின் கடிதம்தான் எனக்கு சின்ன ஆறுதலா இருந்துச்சு. காயத்துக்கு மருந்து மாதிரி இருந்துச்சு.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயம்கூட, தொண்டர்களின் வேண்டுதலால்தான் நான் மறுபிறவியே எடுக்க முடிஞ்சது. தொண்டர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.
அராஜகம்
தலைவர் மறைவுக்கு பிறகு பிரிஞ்சு கிடந்த 2 அணிகளையும் எப்படி ஒண்ணு சேர்த்தோமோ, அதுமாதிரி இப்பவும் கட்சியை சரிபண்ணிடுவோம். தொண்டர்கள் என்கூட இருக்காங்க. எனவே யார் என்ன செஞ்சாலும் அதைப்பற்றி கவலையே படமாட்டேன்.
கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்கிட்டே போறத ஏத்துக்கமுடியாது. இப்படி அராஜகம் பண்ணக்கூடாது.
ஊரடங்கு முடிந்ததும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
இவ்வாறு சசிகலா பேசியுள்ளார்.
சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்தவகையில் திருவாரூரை சேர்ந்த சரவணன், அபுதாகீர், ராணிப்பேட்டையை சேர்ந்த கண்ணதாசன், தேனியை சேர்ந்த கண்ணன், பொள்ளாச்சியை சேர்ந்த முருகவேல், கோவையை சேர்ந்த நாகராஜ் ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் பேசினார்.
அதன் விவரம் வருமாறு:-
நிச்சயம் நல்ல நிலைமைக்கு கட்சியை கொண்டு வருவேன்.
நான் சிறையில் இருந்த காலத்துல தொண்டர்களின் கடிதம்தான் எனக்கு சின்ன ஆறுதலா இருந்துச்சு. காயத்துக்கு மருந்து மாதிரி இருந்துச்சு.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயம்கூட, தொண்டர்களின் வேண்டுதலால்தான் நான் மறுபிறவியே எடுக்க முடிஞ்சது. தொண்டர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.
அராஜகம்
தலைவர் மறைவுக்கு பிறகு பிரிஞ்சு கிடந்த 2 அணிகளையும் எப்படி ஒண்ணு சேர்த்தோமோ, அதுமாதிரி இப்பவும் கட்சியை சரிபண்ணிடுவோம். தொண்டர்கள் என்கூட இருக்காங்க. எனவே யார் என்ன செஞ்சாலும் அதைப்பற்றி கவலையே படமாட்டேன்.
கட்சியில் இருந்து தொண்டர்களை நீக்கிட்டே போறத ஏத்துக்கமுடியாது. இப்படி அராஜகம் பண்ணக்கூடாது.
ஊரடங்கு முடிந்ததும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
இவ்வாறு சசிகலா பேசியுள்ளார்.