ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் நீராட தடை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் புனித தீர்த்தங்களில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-04 12:22 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள கோவில்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜூலை 5 முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக, அங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்