அ.தி.மு.க. ஆட்சிதான் போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்தது ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்

அ.தி.மு.க. ஆட்சிதான் போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்தது ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்.

Update: 2021-07-09 02:22 GMT
சென்னை,

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகங்களின் எந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், அவரவர் வழித்தடத்தில் அமைதியாக பணியாற்றி வருகின்றனர். உடல்நலம் குன்றியவர்கள் முறையான மருத்துவ சான்றுகளின்பேரில் இலகுப்பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.

உடல்நலம் குன்றியோர் யாரையும் பணி மாறுதல் செய்து துன்புறுத்தவில்லை. தொழிலாளர்களை தொழிலாளர்களாக பாவிக்காத அரசு அ.தி.மு.க. அரசு என்பதற்கு கடந்த 10 ஆண்டுகள் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளே சாட்சி. அ.தி.மு.க. ஆட்சிதான் போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்தது.

ஓ.பன்னீர்செல்வம், கடந்த 10 ஆண்டுகள் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொ.மு.ச. உறுப்பினர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, இன்று யாரோ எழுதி கொடுத்ததை கொடுத்து நீலிக்கண்ணீர் வடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்