தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேலும் கூறியிருப்பதாவது:-
*கட்டாயமாக உடல் வெப்ப நிலை பரிசோதனையை வாடிக்கையாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
*அதிக அளவில் கூட்டம் கூடும் பகுதி அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதியை மூட மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யலாம்.
*அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களைஅனுமதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
*விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தல்
*நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும்
*கொரோனா கண்டறிதல்,சிகிச்சை, தடுப்பூசி ஆகிய பணிகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
*வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு உருவாகும்.
*3-வது அலையை தடுக்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.