மாகியில் கொரோனாவுக்கு முதியவர் பலி

மாகியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

Update: 2021-08-14 15:55 GMT
புதுச்சேரி, 
மாகியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

101 பேருக்கு தொற்று

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 101 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 199 பேர், வீடுகளில் 737 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 108 பேர் குணமடைந்தனர்.

முதியவர் பலி

மாகியில் 72 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,804 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.76 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 19 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 553 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 7 லட்சத்து 57 ஆயிரத்து 568 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்