சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
சென்னை எழும்பூர்,சென்ட்ரல் , புரசைவாக்கம், பெரம்பூர், ஆவடி , பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் வில்லிவாக்கம்,கோயம்பேடு,அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை எழும்பூர்,சென்ட்ரல் , புரசைவாக்கம், பெரம்பூர், ஆவடி , பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் , அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர் உள்பட பெரும்பாலான இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
கடந்த 20 நிமிடங்களுக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.