வங்கக் கடலில் நிலநடுக்கம்: சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்

வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2021-08-24 07:47 GMT
சென்னை,

வங்கக் கடல் பகுதியில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், பெசண்ட் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 

சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீட்டர்  கிழக்கு திசையில் வங்கக் கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்