சென்னை வண்ணாரபேட்டையில் மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விபத்து

மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விழுந்தது இதில் 3 பேர் சிக்கி கொண்டனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2021-08-25 11:04 GMT
சென்னை

சென்னை வண்ணாரபேட்டையில்  20 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு குழாய்    சீரமைக்கும் பணிநடைபெற்றது. அப்போது மண் சரிந்து விபத்து  ஏற்பட்டது. இதில் 3 பேர்  சிக்கி கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு படையினர் போராடி 2பேரை மீட்டனர்.  மேலும் ஒருவரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்