அமைச்சர் பொன்முடியின் மகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க. எம்.பி. மற்றும் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம் சிகாமணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை,
தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி. இவர் அக்கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.