பாரதியார்-இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்; சீமான் மலர்தூவி அஞ்சலி

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாரதியாரின் 100-ம் ஆண்டு நினைவுநாள் மற்றும் இம்மானுவேல் சேகரனாரின் 64-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று காலை சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

Update: 2021-09-11 23:35 GMT
இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரனாரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
பெண்களை வன்புணர்வு கொலை செய்பவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அது எங்களின் கோட்பாடு. போலீசாருக்கு 8 மணி நேர பணி என்ற விவகாரத்தில் நீதிமன்றமும் நாம் சொல்வதை கேட்கிறது. இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளை அரசு தினமாக அறிவிக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.நடிகர் விவேக் இடத்தையும், நடிகர் வடிவேலு இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. வடிவேலுவை போன்று இன்னொரு கலைஞர் இனிமேல் பிறந்துதான் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்