கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது - மசோதா இன்று தாக்கலாகிறது

கோவில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் ஆகிறது.

Update: 2021-09-13 04:51 GMT
சென்னை,

கோவில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் ஆகிறது.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார்.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்து ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்ட திருத்தம் செய்யப்பட்டியிருப்பதாகவும், ஏற்கனவே உள்ள சட்டத்தில் கைது செய்வதற்கான வழிவகை இல்லை என்பதால், இந்த திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்