தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு

கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

Update: 2021-09-15 14:10 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,591 ஆக பதிவான நிலையில் இன்று 1658- ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வுத்தூறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,658- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  26 லட்சத்து 38 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1,542-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 50 ஆயிரத்து 740 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,636- ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்