தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலம் 12.23 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத்துறை

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலம் 12.23 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-19 10:56 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

 கடந்த 12-ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதன்படி, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நடபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் பிற்பகல் 3.30 மணி வரை 12.23 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் அமைத்து இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்