இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: ஆசிரியர் கைது

சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த யோகா பயிற்சி ஆசிரியர் யோகராஜை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-06 13:10 GMT
சென்னை,

சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு  மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக யோக பயிற்சியாளர் மீது இளம் பெண் புகார் அளித்தார். 

அதேபோல் யோக பயிற்சியாளர் யோகராஜ் மீது திருப்பூர், மும்பை, ஹாங்காங் போன்ற இடங்களில் பாலியல் புகார் உள்ளதாகவும் இளம் பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் யோக பயிற்சியாளர் யோகராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்