சென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2021-10-14 11:21 GMT
சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் சங்கர் ஜிவால்.  இவர் பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும் செய்திகள்