ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தியபடி சசிகலா மரியாதை
சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு, அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வந்தார்.
சென்னை,
எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. தனது பொன்விழா ஆண்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலடி எடுத்து வைக்க உள்ளது. இந்தநிலையில் சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீர் செல்க மரியாதை செலுத்தினர்.
சசிகலா வருகையால் அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திரண்டனர். முன்னதாக, வழக்கம் போல அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வந்த பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல் தடவையாகும்.