என்ஜினீயரிங் முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

என்ஜினீயரிங் முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவைடைய உள்ளது.

Update: 2021-10-16 18:56 GMT
கோப்புப்படம்
சென்னை, 

என்ஜினீயரிங் படிப்புகளில் காலியாக இருக்கும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் அதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின.

அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் ஏற்கனவே 3 சுற்றுகள் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 4-வது சுற்று கலந்தாய்வு முடிவடைய இருக்கிறது. இதன் மூலம் முதற்கட்ட கலந்தாய்வும் நிறைவு பெறுகிறது.

ஏற்கனவே ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்திருந்த நிலையில், தற்போது முடிவடையும் 4-வது சுற்று கலந்தாய்வில் எவ்வளவு மாணவர்கள் இடங்களை தேர்வு செய்கிறார்கள்? என்ற விவரத்தை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவிக்கும்.

முதற்கட்ட கலந்தாய்வை தொடர்ந்து துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வருகிற 20-ந்தேதி முதல் துணை கலந்தாய்வு தொடங்கி நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்