ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்

இணைய தளங்களில் தன்னை பற்றிய ஆபாசபடங்களை வெளியிட்டுள்ளதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

Update: 2021-10-22 23:30 GMT
சென்னை,

பா.ஜ.க மாநில கலை மற்றும் கலாசார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வக்கீல்கள் பிரிவு தலைவர் பால் கனகராஜூடன் வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். பா.ஜ.க. தலைவர் பற்றியும் ஆபாசமாக பேசி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நானும், பா.ஜ.க.வை சேர்ந்த பெண் நிர்வாகிகளும் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, வண்டி சறுக்கி சாய்ந்துவிட்டது. அப்போது சில பெண் நிர்வாகிகள் கீழே விழுந்து விட்டனர். அவர்களது காலுக்குள் சிக்கிய எனது புடவையும் சற்று விலகி விட்டது. அதை யாரோ சிலர் வீடியோ படமாக எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு விட்டனர். அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன்.

வருத்தம்

பா.ஜ.க.வில் நான் மதிக்கக்கூடிய தலைவர்களோடு, குறிப்பிட்ட ஆபாச வீடியோவையும் இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் கருத்து தெரிவிக்கும் கனிமொழி எம்.பி., இந்த பிரச்சினை குறித்து கருத்து சொல்லாதது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்